துறையூர் அருகே முதியவர் கழுத்தறுத்து தற்கொலை முயற்சி

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சேனப்பநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (71). இவரது மனைவி தாமரை (65). இந்நிலையில் தாமரை வாலீஸ்புரம் கிராமத்தை சேர்ந்த ரெங்கராஜ் (55) என்பவரின் விவசாய நிலத்திற்கு வேலைக்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தாமரையை வேலைக்கு செல்லக்கூடாது என கூறி பன்னீர்செல்வம் கண்டித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இதனை ஏற்காத தாமரை தொடர்ந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த பன்னீர்செல்வம் இன்று (மார்ச் 23) காலை வாலீஸ்புரம் கிராமத்தில் உள்ள ரெங்கராஜின் வீட்டிற்கு சென்று, என்னுடைய குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு நீதான் காரணம் எனக்கூறி கத்தியால் தன்னுடைய கழுத்தை அறுத்துக் கொண்டு வலியால் அலறியுள்ளார். அலறல் சத்தத்தினை கேட்ட அக்கம் பக்கத்தினர் பன்னீர்செல்வத்தை உடனடியாக மீட்டு, 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தை அறிந்த துறையூர் போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி