மணப்பாறை அருகே பொன்னம்பட்டி பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்களை திடீரென தாக்கிய தேனீக்கள் கூட்டத்தால் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.