மணப்பாறை அருகே அதிமுக பூத் கமிட்டி கூட்டம்

திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருங்காபுரி வடக்கு ஒன்றியங்களில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நேற்று 28/03/2023 வெள்ளிக்கிழமை மருங்காபுரி வடக்கு ஒன்றிய மணியன் குறிச்சி ஊராட்சியில் நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளர் முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளருமான செ. செம்மலை மற்றும் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான ப. குமார் ஆகியோர் பூத் கமிட்டிகள் ஆய்வுக் கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். 

இந்த நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மருங்காபுரி வடக்கு ஒன்றிய செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர். சந்திரசேகர், மாவட்ட விவசாய அணி செயலாளர் சின்னசாமி, மாவட்ட துணைச் செயலாளர் பொன்னுசாமி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் முருகன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் எஸ். கே. எம். டாக்டர். இஸ்மாயில், மணப்பாறை தெற்கு ஒன்றிய செயலாளர் அன்பரசன், மருங்காபுரி தெற்கு ஒன்றிய செயலாளர் பொன்னுச்சாமி, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பி. மூர்த்தி, மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் ஆர். பி. ரங்கசாமி, மாவட்ட அம்மா பேரவை துணைத் தலைவர் பி. என். எஸ் நல்லுசாமி மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், அணி நிர்வாகிகள், கிளைக்கழக நிர்வாகிகள் என அனைவரும் திரளாகக் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி