திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியை சேர்ந்த தீபக் ஆகாஷ் (20). இவர் நேற்று வீட்டின் அருகே தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இது குறித்து அறிந்த மணப்பாறை போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறாய்விற்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.