இதன் ஒருபகுதியாக, திருச்சி கருமண்டபம் பொன்னகரில் உள்ள சுவர்ண விநாயகர் கோயிலில் கூட்ட நெரிசலின்போது, பக்தர்கள் எளிதாக காணிக்கை செலுத்துவதற்கு ஏதுவாக, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் இ-காணிக்கை வசதி ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்வுக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் திருச்சி மண்டல முதன்மை மேலாளர் ஜி. ஸ்ரீராம் தலைமை வகித்தார்.
இ-காணிக்கை வசதியை நவீன் முகவரண்மை உரிமையாளர் ஜோசப் ஜெரால்டு தொடங்கி வைத்தார். இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கருமண்டபம் கிளை மேலாளர் விஜயலட்சுமி, வங்கி அதிகாரிகள், கோயில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இ-காணிக்கை சேவை தொடங்கப்பட்டதும், பக்தர்கள் கியூ.ஆர். கோடு வசதியைப் பயன்படுத்தி காணிக்கை செலுத்தினர்.