அரசு பேருந்து மோதியதில் இளைஞர் பரிதாப பலி

துறையூர் லட்சுமிகாந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சரண்ராஜ். இவர் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவம் நடந்த நேற்று(செப்.9) மதியம் 2 மணி அளவில் துறையூர் அருகே உள்ள கிழக்குவாடி பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது எதிரே வந்த அரசு பேருந்து இவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் கீழே விழுந்த சரண்ராஜ் சம்பவ இடத்திலேயே பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து, உயிரிழந்த சரண்ராஜின் தந்தை அளித்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுனரான நெட்டவேலம்பட்டியைச் சேர்ந்த கோகுல் என்பவர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் சரண்ராஜின் உடலை துறையூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி