மணப்பாறை: குழந்தை இல்லாததால் பெண் தூக்கிட்டு தற்கொலை

மணப்பாறை அருகே உள்ள சீதாப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அருண் ஸ்ரீகரன். இவருக்கும் ஜேஸ்மின் ராக்ஷி என்ற பெண்ணுக்கும் மூன்று வருடங்களுக்கு முன்பாக காதல் திருமணம் நடைபெற்றது. திருமணம் ஆகி 3 ஆண்டுகளாக இருவருக்கும் குழந்தை இல்லாத காரணத்தாலும், அருண் ஸ்ரீகரன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி இருந்ததாலும், இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்நிலையில் வீட்டில் தனியாக இருந்த ஜேஸ்மின் ராக்ஷி தனது சேலையில், பேன் மாட்டும் கம்பியில் தூக்குமாட்டிக் கொண்டு இறந்துள்ளார். தகவல் அறிந்த வையம்பட்டி காவல்துறையினர் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடித்து உறவினர்கள் வசம் ஒப்படைத்தனர். மேலும் வையம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து திருமணமான மூன்று வருடத்தில் இறந்ததால் வையம்பட்டி காவல் ஆய்வாளர் தனபாலன், மணப்பாறை உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி