திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நேதாஜி நகர் அருகே மது பாட்டில்களை கள்ள சந்தையில் விற்ற சேகர் (54) என்பவரை எடமலைப்பட்டி புதூர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 28 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.