திருச்சி மாவட்டம் வையம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடுப்பட்டி கிராமத்தில் அரசு மதுபானங்கள் பதுக்கி விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, வீராசாமி என்பவர் தனது வீட்டில் மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்து கொண்டிருந்தபோது போலீசாரிடம் சிக்கினார். அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 26 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.