துறையூர் சின்ன ஏரியை ஆய்வு செய்த துணை சபாநாயகர் ரவிசங்கர்

துறையூர் சின்ன ஏரி கடந்த 15 வருடங்களாக தூர்வாரப்படாமல் இருப்பதால், அப்பகுதியில் சாக்கடை நீர் தேங்கி துர்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து, எம்எல்ஏவும் துணை சபாநாயகருமான ரவிசங்கர், நகராட்சி அதிகாரிகள் மற்றும் துறையூர் வட்டாட்சியருடன் சின்ன ஏரியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி