இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சியில் சிறப்பு தொழுகை இன்று (மே 28) நடைபெற்றது. திருச்சி மரக்கடை பகுதியில் உள்ள சையது முர்த்தசா அரசு பள்ளி மைதானத்தில் நடந்த இந்த தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு புத்தாடை அணிந்து இறைவனை வழிபட்டனர். பின்னர் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.