லால்குடி அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை

திருச்சி மாவட்டம் லால்குடி கணபதி நகரை சேர்ந்தவர் விக்னேஷ் கொத்தனார் ஆக பணிபுரிந்து வருகிறார். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு மீனாட்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இசை மித்ரா என்ற பெண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களாக விக்னேஷ் மது குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தாராம். 

இந்நிலையில் நேற்று முன்தினம் (பிப்.2) இரவு வழக்கம்போல் குடித்துவிட்டு வந்து மனைவி மீனாட்சியிடம் இரவு முழுவதும் பிரச்சினை செய்துள்ளார். இதனால் மனமுடைந்த மீனாட்சி நேற்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி