இந்த வருடத்திற்கான தேர்த்திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மன் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த நிலையில் தமிழ் புத்தாண்டான இன்று தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் காவேரியில் இருந்து பக்தர்கள் தீர்த்த குடம், பால்குடம் போன்றவை எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். தேர் திருவிழாவை முன்னிட்டு ஆங்காங்கே பக்தர்களுக்கு குளிர்பானம், அன்னதானம் உள்ளிட்டவைகளை வழங்கப்பட்டது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஆஸ்திரேலியா முதலிடம், நியூசிலாந்து முன்னேற்றம்