திருச்சி: 'கமல் சொன்னதில் எந்த தவறும் இல்லை'

திருச்சியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, தமிழ்நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்க நகராட்சி நிர்வாகத் துறை சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. ஜூன் 12ஆம் தேதி மேட்டூரில் தண்ணீர் திறந்த பின்பு கடைமடை வரை தண்ணீர் செல்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் அந்தத் துறை சார்பில் எடுக்கப்பட்டு உள்ளது. 

மொழி குறித்து கமல் சொன்னதில் எந்தத் தவறும் இல்லை. தமிழிலிருந்து தான் அனைத்து மொழிகளும் வந்தன என்று அவர் சொல்லியதில் எந்த தவறும் இல்லை. நீதிபதி தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதனால் அவர் பேசியது சரிதான். திமுக அரசு மீது எந்தக் குறையும் கூற முடியாததால் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் தீர்ப்பு வந்த பின்பும் பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குறை கூறுகிறார் என்றார்.

தொடர்புடைய செய்தி