திருச்சி குண்டூர் பகுதியைச் சேர்ந்த குணசேகரன், கடந்த சில மாதங்களாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இதனால் அவரது மனைவி கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இந்த மன உளைச்சல் காரணமாக, கடந்த 21 ஆம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நவல்படாடு போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.