திருச்சி மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதத்திற்கும் குறையாத மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 8,593 பேர் தபால் வாக்கு செலுத்த படிவம் சமர்ப்பித்துள்ளனர். இவர்களது வாக்குகளை சேகரிக்க 85 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் வரும் 13, 14, 15 ஆகிய தேதிகளில் நேரில் சென்று வாக்குகளை பெற உள்ளனர். இந்த தகவலை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சரவணன் தெரிவித்துள்ளார்.