அதே பகுதியில் உள்ள ராயர் தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (58). வேளாண் துறையில் ஓட்டுநராக வேலை பார்த்து வரும் இவர், வீட்டின் பூட்டுக்களை உடைத்து, பீரோவில் வைத்திருந்த 35 பவுன் நகைகள் மற்றும் பூஜை அறையில் இருந்த வெள்ளிப் பொருள்களையும் திருடிச் சென்றது தெரியவந்தது. இதற்கிடையே அமிர்தா நகரைச் சேர்ந்த கார்த்திகைவேல் (36) மற்றும் ஆனந்த் (40) ஆகிய இருவரது வீட்டின் முன்பக்க கதவுகளிலிருந்த பூட்டுக்களை மர்ம நபர்கள் உடைத்திருப்பதாக காவல் நிலையத்தில் தனித்தனியாக புகார் அளித்தனர். வீட்டினுள் சென்ற மர்ம நபர்கள், அங்கு நகைகள் ஏதுமில்லாததால் கிடைத்த பொருள்களை திருடிச் சென்றுள்ளனர்.
கூட்டணி பேச்சுவார்த்தை: அ.ம.மு.க. தவிர்க்க முடியாத சக்தி - தினகரன்