சமயபுரம் கோயில் உண்டியல் காணிக்கை ரூ 1.06 கோடி

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் புதன்கிழமை நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் சமயபுரம் மாரியம்மன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் இளங்கோவன், கோயில் இணை ஆணையர் பிரகாஷ், அறங்காவலர்கள் ஆகியோர் முன்னிலையில் அலுவலர்கள், பணியாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். 

நிறைவில் உண்டியல்களிலிருந்து ரூ. 1 கோடியே 06 லட்சத்து 20 ஆயிரத்து 548, தங்கம் 2 கிலோ 150 கிராம், வெள்ளி 3 கிலோ 580 கிராம், 103 வெளிநாட்டு பணத்தாள்கள், 489 வெளிநாட்டு நாணயங்கள் கிடைத்ததாக கோயில் நிர்வாகம் தெரிவித்தது

தொடர்புடைய செய்தி