மணப்பாறை அருகே மணப்பட்டி பிரிவு சாலையில் அடையாளம் தெரியாத ஆண் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உயிரிழந்த நபர் சீகம்பட்டியை சேர்ந்த கருணாநிதி என்பது தெரியவந்தது.