மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் பரதனை ஆதரித்து, முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி ச. கண்ணனூர் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் அதிமுக அரசின் முந்தைய சாதனைகளையும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக அரசின் வாக்குறுதிகளையும் எடுத்துரைத்து, இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்கக் கேட்டு பிரச்சாரம் செய்தார்.