லால்குடியில் வஉசி உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை

திருச்சி மாவட்டம் லால்குடி தமிழர் தேசம் கட்சி அலுவலகத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனார் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு கட்சியினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதைத் தொடர்ந்து, ஜனவரி 25 அன்று திருச்சியில் நடைபெறவிருக்கும் மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இம்மாநாட்டில் நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என மாவட்டச் செயலாளர் குமார் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி