திருச்சியில் தனியார் பேருந்து மோதி பைக் ஓட்டுநர் பலி

கரூர் மாவட்டம் கீழக்குறிச்சியை சேர்ந்தவர் மயில்ராஜ் சம்பவம் நடந்த நேற்று தனது இருசக்கர வாகனத்தில் இனாம்குளத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வெள்ளிவாடி பிரிவு சாலை அருகே சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அப்பகுதியில் வந்த தனியார் பேருந்து ஒன்று அவர் மீது மோதியதில் கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்த மயில்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். 

இது குறித்து வழக்கு பதிவு செய்த இனாம்குளத்தூர் போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விபத்து ஏற்படுத்திய தனியார் பேருந்து ஓட்டுனரான லால்குடி எல். அபிஷேகபுரத்தைச் சேர்ந்த வரதராஜன் என்பவர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி