இந்த கலந்தாய்வுக்கு விளையாட்டுப் பிரிவில் 460 பேரும் என்சிசி 135 பேரும் மாற்றுத்திறனாளி பிரிவில் 63 பேரும் முன்னாள் படை வீரர்கள் பிரிவில் 5 பேரும் அந்தமான் நிக்கோபார் தீவுகளைச் சேர்ந்தவர்கள் பிரிவில் இரண்டு பேரும் பாதுகாப்பு படை வீரர்கள் பிரிவில் 5 பேரும் விண்ணப்பித்துள்ளனர். 10 இலக்கியப் பாடத்திற்கு 18,642 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் தமிழ் இலக்கியத்திற்கு 2,649 பேரும் ஆங்கில இலக்கியத்திற்கு 1,412 பேரும் கணினி அறிவியல் பிரிவிற்கு 226 பேரும் தகவல் தொழில்நுட்பப் பிரிவிற்கு 1,500 பேரும் கணினி பயன்பாட்டுப் பிரிவிற்கு 2,024 பேரும் பிபிஏ பாடப்பிரிவிற்கு 2,013 பேரும் பிகாம் பிரிவிற்கு 2,022 பேரும் வரலாற்றுப் பாடத்திற்கு 122 பேரும் இயற்பியல் பாடத்திற்கு 1,008 பேரும் பிஎஸ்சி பயோ டெக்னாலஜிக்கு 1,856 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
பொது பிரிவு கலந்தாய்வு இம்மாதம் நான்காம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. பொது கலந்தாய்வில் சேர விரும்பும் மாணவர்கள் தங்களது அசல் மற்றும் நகல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும் என முதல்வர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.