திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் அண்மையில் சோதனை மேற்கொண்டார். அப்போது பக்தர்களிடம் விஐபி தரிசனத்திற்காக பணம் வசூலிப்பது உள்ளிட்ட பல்வேறு நிர்வாக முறைகேடுகள் கண்டறியப்பட்டன. இந்த விவகாரத்தில் முறையான கண்காணிப்பு தவறியதால், கோயிலின் இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் ஆகியோரை உடனடியாக பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
நன்றி:PT