அங்கு வந்த போலீசார் ஒருவர் ஏன் வீடியோ எடுக்கிறீர்கள்? என்று கேட்டார். அதற்கு அந்த பெண், பட்டா திருத்தம் தொடர்பாக பலமுறை மனு அளித்தும் எங்களை அலைக்கழிக்கிறார்கள். எங்களுக்கு நீதி வேண்டும். கடந்த முறை நிறைய பேர் பேட்டி எடுத்தார்கள் ஆனால் வரவில்லை. அதனால் தான் நானே எடுத்து குரூப்பில் போட்டு அதன் மூலமாகவாவது நடவடிக்கை கிடைக்கும் என்று எடுத்தேன் என்றார்.
சமீபகாலமாக முகநூல் மற்றும் வாட்ஸ்ஆப் மூலமாக பல்வேறு செய்திகளை பாதிக்கப்பட்ட மக்களே வெளிக்கொண்டுவருகிறார்கள். நூற்றுக்கணக்கான மனுக்களுக்கு செய்திதாள்களுக்கும் இடமில்லாத நிலை, தொலைக்காட்சிகளிலும் முக்கிய பிரச்சனைகளை மட்டும் ஒளிபரப்பு செய்ய முடிகிறது. தற்போது தங்கள் பிரச்சனைகளை வாட்ஸ்ஆப் மூலமாக கொண்டுவந்து மக்களே ஊடகமாக மாறிவருகின்றனர்.