தூத்துக்குடி தாமஸ் நகரைச் சேர்ந்த தாஜுதீன் மகன் பட்டாணி (40) என்பவருக்குச் சொந்தமான ஜாகீர் உசேன் நகரில் உள்ள மாட்டு இறைச்சிக் கடையில், ஊழியர் மாரிமுத்து (43) மாடுகளை இறக்கும்போது, ஒரு மாடு கொம்பால் முட்டியதில் வயிறு பகுதியில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தாளமுத்து நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் இருளப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.