இதில் பணியில் இருந்த எப்போதும் வென்றான் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகனி, கருங்குளம் பகுதியைச் சேர்ந்த சங்கர சுப்பு, தூத்துக்குடி வள்ளிநாயகபுரத்தைச் சேர்ந்த அன்புராஜ் ஆகிய 3 தொழிலாளிகளுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் அனல் நிலைய ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தருவைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதிகள் பரபரப்பு கருத்து