இந்நிலையில் அரியலூரைச் சேர்ந்த எதிரி கடந்த 2016ம் ஆண்டு இறந்த நிலையில் மற்றொரு எதிரியான சுடலைமுத்துவை மேற்படி ADJ-II தூத்துக்குடி நீதிமன்றம் கடந்த 2019ம் ஆண்டு வழக்கிலிருந்து விடுதலை செய்து உத்தரவிட்டது. இதனையடுத்து சிப்காட் காவல் நிலைய கொலை வழக்கு எதிரி சுடலைமுத்து வழக்கிலிருந்து விடுதலையானதையடுத்து காவல்துறை சார்பாக கடந்த 2021 ஆம் வருடம் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இவ்வழக்கை விசாரித்த மாண்புமிகு உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் பூர்ணிமா ஆகியோர் இன்று (20.12.2024) குற்றவாளியான சுடலைமுத்து என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினர். இவ்வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் செந்தில்குமார் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்டது குறிப்பிடத்தக்கது.