தூத்துக்குடி வடக்கு மண்டலப் பகுதிகளில் உள்ள இரவு நேர உணவகங்களில் திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. உணவகக் கழிவுகள், மக்கும் மற்றும் மக்காத குப்பைகளைத் தனித்தனியாகப் பிரித்து மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. விதிகளை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.