அப்போது தனியாக வீட்டில் இருந்த சாந்தி கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தாராம். அப்போது அங்கு வந்த மர்ம நபர் வீட்டுக்குள் புகுந்து சாந்தியின் கழுத்தை நெரித்து சங்கிலியை பறித்துக் கொண்டு பின்புறம் வழியாக தப்பியோடிவிட்டாராம். மர்மநபர் பறித்ததில் பாதி சங்கிலி கட்டிலில் கிடந்ததாம். இதுகுறித்து ஆறுமுகனேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரபல ஹாலிவுட் வில்லன் நடிகர் அலெக்சாண்டர் மார்ட்டன் காலமானார்