தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அருகே அல்லிக்குளத்தில் வசித்த பஞ்சவர்ணம் (47) கடும் வெப்பம் காரணமாக வீட்டின் வெளியில் தூங்கியபோது விஷப் பாம்பு கடித்துள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றாலும், தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.