அப்போது எதிரே வந்த வேன் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இடதுபுறம் சென்று பல்டி அடித்து நின்றது. இதில் வேனில் வந்த ஜவுளிக்கடை மூன்று ஆண்கள் 12 பெண்கள் உட்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் திருச்செந்தூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து தகவல் தெரிந்த பணியாளர்களின் குடும்பத்தினர் அரசு மருத்துவமனையில் திரண்டதால் மருத்துவமனை வளாகம் சோகத்தில் ஆழ்ந்தது.
திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் போதுமான இடம் இல்லாததால் காயமடைந்த சில பெண் பணியாளர்கள் வெளியே உட்கார வைக்கப்பட்டனர். அப்போது பெற்றோர்கள் உடனடியாக சிகிச்சை அளிக்க வேண்டும் என ஜவுளிக்கடை உரிமையாளரிடம் ஆத்திரமடைந்ததால் உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.