இந்த நிலையில் இன்றைய தினம் கோவில் நிர்வாகம் சார்பில் அதற்கான விவரத்தினை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 12 ஆண்டுகளுக்குப் பின்பு நடைபெறும் இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு வருகின்ற ஜூலை மாதம் 1ம் தேதி முதல் ஜூலை மாதம் 7ம் தேதி வரை கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளதாகவும் கும்பாபிஷேகத்தின் சிகர நிகழ்ச்சியான கும்ப கலசங்களுக்கு புனித நீர் ஊற்றும் நிகழ்ச்சி வருகின்ற ஜூலை மாதம் 7ம் தேதி நடைபெற உள்ளதாகவும் அதே நேரம் புனித நீர் ஊற்றுவதற்கு அதிகாலை 6.15 மணி முதல் 6.50 மணி வரை நேரம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை கோவில் இணை ஆணையர் ஞானசேகரன் அறிவித்துள்ளார்.
அண்ணா பல்கலை.,யில் 22 பணியிடங்கள்