திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் உள்ள தெய்வானை யானை தனக்குத்தானே வைத்தியம் பார்த்துக் கொண்ட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. தெய்வானை யானைக்கு காலில் பூஞ்சை நோய் ஏற்பட்டுள்ளது. எனவே, கோவில் வளாகத்திற்கு வந்த தெய்வானை அங்குள்ள வேப்பங்குலையை பறித்து, அதை காலில் பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ள இடத்தில் தடவி தனக்குத்தானே வைத்தியம் பார்த்துக் கொண்டது. இது காண்போரை ஆச்சரியமடைய செய்தது.