தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் 2 முறையாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி கருணாநிதி வெற்றி பெற்றார். எனவே, வாக்களித்த பொதுமக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார். இன்று (13/07/2024) கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட வானரமுட்டி கிராமத்தில் நன்றி அறிவிப்பு நிகழ்வு தொடங்கி, கழுகுமலை, வேலாயுதபுரம், செட்டிகுறிச்சி, அய்யனாரூத்து, கயத்தாறு, அகிலாண்டபுரம், கடம்பூர், காமநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் வாக்காளர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது, மக்கள் அளித்த மனுக்களையும் கனிமொழி எம். பி பெற்றுக் கொண்டார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலாளரும், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதா ஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.