இவர் கடந்த 8-ஆம் தேதி திருச்செந்தூர் அரசு மருத்துவமனை பின்புறமுள்ள பாதாள சாக்கடைக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்குவதற்காக, சுடலை மணி சக பணியாளர்களுடன் கழிவுநீர் உறிஞ்சும் ராட்சத லாரியுடன் சென்றாராம். அடைப்பை சரி செய்வதற்காக அங்குள்ள தொட்டிக்குள் சுடலைமணி இறங்கிய போது, கழிவுநீருக்குள் தவறி விழுந்து மூழ்கி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, அவரது சடலம் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, உடற்கூறாய்வு பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, ஒப்பந்தப்பணியின்போது உயிரிழந்த அவரின் குடும்பத்தினருக்கு நகராட்சி மற்றும் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் இழப்பீடு தொகையாக ரூ. 20 லட்சத்திற்கான காசோலையை திருச்செந்தூர் நகராட்சி பொறியாளர் சரவணன் வழங்கினார்.
'முதலமைச்சருக்கு சட்னியா?.. சாம்பாரா?'.. அண்ணாமலை விமர்சனம்