திருச்செந்தூர் அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!

திருச்செந்தூர் அருகே புதிதாக கட்டி வரும் வீட்டின் சுவரை நனைக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி ஒருவர் பரிதாபமாக இறந்தார். தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே உள்ள முத்தையாபுரம் கக்கன்ஜி நகரைச் சேர்ந்தவர் ஊர் காத்தான் மகன் சொக்கலிங்கம் (49), கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு லிங்கம்மாள் என்ற மனைவியும் குணா என்ற மகனும் சுகுணா என்ற மகளும் உள்ளனர். 

சொக்கலிங்கம் அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். அந்த வீட்டில் சுவரை நனைப்பதற்காக மின் வயரை இணைக்க முயன்றபோது அவர் உடலில் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்தி