திருச்செந்தூர் முருகன் கோவிலில் விரைவு தரிசனத்திற்கு முறைகேடாக பணம் வசூலிக்கப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து, அமைச்சர் ரமேஷ் பக்தர் போல் சென்று ஆய்வு செய்தார். ஜி-பே மூலம் ரூ. 4,000 செலுத்தி முறைகேட்டை உறுதிப்படுத்தியதால், சம்பந்தப்பட்ட அர்ச்சகர்கள் சிக்கினர். ஆய்வுக்குப் பிறகு, கோவில் நிர்வாகம், வருவாய், வசதிகள் குறித்து விசாரணை நடப்பதாகவும், தவறு செய்தவர்கள் மீது பாகுபாடின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.