இதையொட்டி சிவன், வெயிலுகந்தம்மன் கோவில்களில் கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் 2, 3-ம் கால யாகசாலை பூஜைகள் நடந்தது. சிவன் கோவிலில் நேற்று அதிகாலை 4-ம் கால யாகசாலை பூஜைகள், மகா பூர்ணாகுதி, தீபாராதனை யாத்ராதானம் நடந்தது. பின்னர் பூஜையில் வைக்கப்பட்ட புனித நீர் கோவில் விமான தளத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதிகாலை 5.45 மணிக்கு விமான கலசத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் சுவாமி, அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது. பக்தர்களுக்கு மதியம் அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் பிரசன்ன பூஜை, புஷ்பாஞ்சலி மற்றும் சுவாமி நடராஜர் புறப்பாடு நடந்தது.
வேட்புமனுவில் தகவலை மறைத்ததாக மு.க.ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு