திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சிவகார்த்திகேயன், 'பராசக்தி' படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்தார். அடுத்த படம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் வகையில் இருக்கும் என்றும் அவர் கூறினார். மேலும், விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.