அதிகாலை 3மணி முதல் அய்யாவுக்கு தாலாட்டு பாடுதல், அபயம் பாடுதல், பள்ளி உணர்த்தல், பணிவிடைகள், அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. காலையில் சூரிய உதயத்தின் போது பள்ளியரையில் உள்ள பனிவிடை பொருட்களுக்கு கடல் பதமிடுதல் நிகழ்வு நடைபெற்றது. இதில் துணை தலைவர் அய்யா பழம், பொருளாளர் கோபால், செயலாளர் பொன்னுதுரை, துணைச் செயலாளர் ராஜேந்திரன் உட்பட நெல்லை, தூத்துக்குடி, குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
மார்கழி மாதமும் அதன் சிறப்புகளும் ஒரு பார்வை