தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அனுகூலபுரத்தில் உள்ள முனியாண்டி சுவாமி, பொன் இசக்கியம்மன் கோயில்களில் மர்மநபர்கள் புகுந்து சிலைகள் மற்றும் பீடங்களை ஆயுதங்களால் சேதப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக பூசாரி பெருமாள் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, மோகன் சார்லஸ் (38) என்பவரை கைது செய்துள்ளனர். அவரது நண்பர் வேல்குமார் தலைமறைவாக உள்ளார். போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.