மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான அளவுக்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது. சில தரப்பினர் ஆஜராகாததால், நீதிபதி வழக்கை வரும் பிப்ரவரி 24ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.