திருச்செந்தூர்: கத்தியால் குத்திய வழக்கில் 10 ஆண்டு சிறை

திருச்செந்தூரில் யாசகம் பெறுபவரை கத்தியால் குத்தியவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்செந்தூர் சார்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன் மகன் சுரேஷ் (37). இவர் திருச்செந்தூர் பைரவர் கோயிலில் சமையல் தொழிலாளியாக இருந்துள்ளார். கும்பகோணத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் மகன் வெங்கடேஷ். இவர் பைரவர் கோயில் முன்பு யாசகம் பெற்று வந்துள்ளார். 

இந்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், சுரேஷ், வெங்கடேஷை கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்தார். இச்சம்பவம் குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை திருச்செந்தூர் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரித்த சார்பு நீதிபதி செல்வபாண்டி, சுரேஷ்க்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

தொடர்புடைய செய்தி