தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொடங்கி வைத்த ‘விழுதுகள்’ ஒருங்கிணைந்த சேவை மைய திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார வளாகத்தில் புதிய மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் க. இளம்பகவத் இந்த மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து பார்வையிட்டார். இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் ஒரே இடத்தில் பல்வேறு அரசு சேவைகளை எளிதாகப் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.