தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள குலசேகரன்பட்டினத்தில், 2 வயது ஆண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருசக்கர வாகனத்தில் வந்த சென்னையைச் சேர்ந்த தம்பதி ஒன்று குழந்தையை கடத்திச் சென்றுள்ளது. இதுகுறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில், போலீசார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டனர். அதன்பேரில், குழந்தையை 20 நிமிடத்தில் போலீசார் மீட்டு, கடத்தல் தம்பதியை அதிரடியாக கைது செய்தனர்.