அப்போது மேம்பாலம் பகுதியில் வைத்து அவரது மின்சார இருசக்கர வாகனத்தின் பேட்டரியில் மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றியது. உடனடியாக வாகனத்தை சாலையில் போட்டுவிட்டு பதறியபடி நின்றார். அப்போது அந்தப் பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த மாவட்ட தீயணைப்புத் துறையினர் சாலையில் பற்றி எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்து பெரும் விபத்தைத் தடுத்தனர். தூத்துக்குடியில் சாலையில் சென்றுகொண்டிருந்த மின்சார இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் சிறிது நேரம் தூத்துக்குடி எட்டையபுரம் சாலையில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.