தூத்துக்குடி: அரசு திட்டங்களை பட்டியலிட்ட செல்வப்பெருந்தகை (VIDEO)

தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி அளித்தார். அப்போது தமிழக மக்களுக்கு எது தேவையோ அதை இந்த அரசு செய்து வருகிறது. தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில் நிறைவேற்றாமல் உள்ள 10% வாக்குறுதிகளை நிறைவேற்றுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அதிமுக கஜானாவை காலி செய்தபடியும் அதனை திறமையாக தமிழக அரசு கையாண்டு வருகிறது என்று கூறினார். 

ஆயிரம் ரூபாய் மகளிர் உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, கலைஞர் கனவு திட்டம், பள்ளி மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குகிறார்கள். பெண்கள் காலையில் பேருந்தில் இலவச பயணம் மேற்கொள்கின்றனர். காலை உணவு, குழந்தைகளுக்கு பள்ளிக்கு செல்லும்போது மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை கிடைக்கிறது. சமூக நலத்திட்டங்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதையெல்லாம் பாராட்ட வேண்டும் என்று கூறினார்.

தொடர்புடைய செய்தி