இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பேட்மா நகரம் இஸ்லாமிய கிராம மக்கள் சார்பில் முறையான ஆவணங்களை தாசில்தார், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் சமர்ப்பித்தும், இதுவரை இதற்கு உரிய தீர்வு எடுக்காமல் மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது. இஸ்லாமியர்களின் பாதுகாவலர் எனக் கூறிவரும் தமிழக அரசு இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு தங்களுக்குரிய இடத்தை முறையாக தங்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, இன்று நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள், இஸ்லாமிய பெண்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்