தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகே, மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் கட்டிடத் தொழிலாளியான ராஜா (41) என்பவரை, நண்பர் பாஸ்கர் (37) மரக்கட்டையால் அடித்துக் கொன்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய பாஸ்கரை போலீசார் சில மணி நேரங்களில் கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.